TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

புதுச்சேரி அரசு எழுத்தர் பணிகளுக்கு 154 பேர் தேர்வு


புதுச்சேரியில் நடைபெற்ற அரசுத்துறை எழுத்தர், முதுநிலை எழுத்தர் பதவிகளுக்கான தேர்வில் 154 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியில் முதுநிலை எழுத்தர், மேல்நிலை எழுத்தர் பணியிடங்களுக்கான தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 இத்தேர்வை 9,534 பேர் எழுதினர். தேர்வுகள் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, யேனம் ஆகிய 4 மையங்களில் நடைபெற்றது.
 இத்தேர்வு முடிவுகளை பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை சிறப்பு செயலர் சுந்தரவடிவேல் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.
 அதன்படி, 119 மேல்நிலை எழுத்தர், 35 முதுநிலை எழுத்தர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
 பொதுப்பிரிவு-62, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு-20, இதர பிற்படுத்தப்பட்டோர்-10, பிற்படுத்தப்பட்ட பழங்குடியினர்-1, முஸ்லிம்-2, இபிசி-1, ஆதிதிராவிடர்-17 எந்ற வகையில் தேர்வு செய்யப்பட்டனர்.  பொதுப்பிரிவில் ராஜலட்சுமி 68.00 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றார்.
 முதுநிலை எழுத்தர் பதவிக்கு பொதுப்பிரிவு-21, மிகவும் பிற்படுத்தப்பட்டோர்-5, இதர பிற்படுத்தப்பட்டோர்-3, ஆதிதிராவிடர்-5 என்று தேர்வு செய்யப்பட்டனர்.
 இதில் பொதுப்பிரிவில் ஆனந்தராஜா 54.50 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றார்.
 இத்தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணியளவில் வெளியிடப்பட்டது.

No comments:

Post a Comment