TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

3000 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப உத்தரவு

தமிழகம் முழுவதும் பதிவு மூப்பு அடிப்படையில் மாநில அளவில் 1080 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிடங்களுக்கான நியமனத்திற்கான கலந்தாய்வு நடந்தது.
இதில் 397 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. திருச்சியில் முதன்முறையாக ஆன்லைன் வாயிலாக அந்தந்த மாவட்டங்களுக்கான இடங்களுக்கு 683 உத்தரவு பெற்றனர். இதற்கான பணிநியமன ஆணையினை அமைச்சர் சிவபதி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளிகல்வித்துறை இயக்குனர் தேவராஜன், துணை இயக்குனர் உமா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் சிவபதி பேசுகையில், உத்தரவு பெற்ற ஆசிரியர்கள் 100 சதவீத தேர்ச்சி பெறும் வகையில் மாணவர்களை உருவாக்க வேண்டும். மேலும் 3000 பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக ரூ.15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது என்று கூறினார்.

No comments:

Post a Comment