TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

சென்னையில் வேலைவாய்ப்பு முகாம்!!


சென்னை கிண்டியில் வரும் வெள்ளிக்கிழமை (08.11.2019), அரசு வேலைவாய்ப்புத் துறை மற்றும் தனியார் துறை இணைந்து வேலைவாய்ப்பு முகாமை நடத்தவுள்ளது. இதற்கான அறிவிப்பை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் (பொறுப்பு) விஷ்ணு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும், வாரந்தோறும் வெள்ளிக்கிழமையானது வேலைவாய்ப்பு வெள்ளியாக அனுசரிக்கப்பட்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது எனவும், இதன் மூலம் வாரந்தோறும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தனியார் துறையில் பணி நியமனம் பெற்று வருகின்றனர் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இணைந்து வருகின்ற வெள்ளிக்கிழமை (08.11.2019) அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளன.

வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் இடம்:

ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகம், கிண்டி - ஆலந்தூர் சாலை, சென்னை-32.

வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நேரம்:

 காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை 

வயது வரம்பு:
35 - வயதிற்கு உட்பட்டோர், அனைவரும் பங்கு பெறலாம்.

கல்வித்தகுதி:
8, 10, 12 -ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமா, கலை மற்றும் அறிவியல் பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) போன்ற கல்வித்தகுதியை உடைய (மாற்றுத் திறனாளிகள் உட்பட) அனைவரும் கலந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment