இந்திய அணுசக்தி கழக நிறுவனம் சுருக்கமாக என்.பி.சி.ஐ.எல். என அழைக்கப்படுகிறது. இந்த அமைப்பின் கீழ், பல்வேறு அணுமின் நிறுவனங்கள் இயங்குகின்றன. தற்போது கூடங்குளம் அணுஉலையில் எச்.ஆர்., நிதி, கணக்கு, மெட்டீரியல் மேனேஜ்மென்ட் போன்ற பிரிவுகளில் அசிஸ்டன்ட் பணிகளும், ஸ்டெனோ பணியிடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
மொத்தம் 56 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இட ஒதுக்கீடு வாரியாக பொது- 28, ஓ.பி.சி.- 16, எஸ்.சி.- 10 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.அறிவியல், கலை மற்றும் வர்த்தகம் சார்ந்த பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. ஸ்டெனோகிராபர் பணிக்கு தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து திறன் அவசியம். விண்ணப்பதாரர்கள் 45 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.இது பற்றிய விரிவான விவரங்களை www.npcil.nic.in என்ற இணையதள முகவரியில் பார்க்கலாம். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இணையதளத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து நிரப்பி அனுப்ப வேண்டும். அத்துடன் தேவையான சான்றுகளை இணைப்பது அவசியம். விண்ணப்பங்கள் சென்றடைய கடைசி நாள்: 31-12-2016.
No comments:
Post a Comment