TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

மீன்வள உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் காலியாக உள்ள மீன்வள உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.திருவள்ளூர் மாவட்ட மீன்வள துறையில், (இருப்பு) பொன்னேரி மீன் துறை உதவி இயக்குனர் கட்டுப்பாட்டில் பூண்டி மீன் துறை ஆய்வாளர் அலுவலகத்தில் காலியாக உள்ள ஒரு மீன்வள உதவியாளர் பணியிடம் நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழில் எழுத மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.நீச்சல் தெரிந்திருக்க வேண்டும். மீன் பிடித்தல், வலை பின்னுதல் மற்றும் அறுந்த வலைகளை பழுது பார்க்க தெரிந்திருக்க வேண்டும். மீன்வள துறையினால் நடத்தப்பட்ட மீனவர் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.தகுதியுடைய நபர்கள் தங்களது கல்விச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், குடும்ப அட்டை நகல், இரண்டு பாஸ்போர்ட் புகைப்படங்கள் ஆகியவற்றுடன் வரும் 28க்குள், மீன் துறை இணை இயக்குனர் (மண்டலம்) சென்னை அலுவலகம், எண்.75, சாந்தோம் நெடுஞ்சாலை, எம்.ஆர்.சி.நகர், சென்னை -- 600 028 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.இத்தகவலை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment