திருவள்ளூர் மாவட்டத்தில், எம்.ஜி.ஆர்., சத்துணவு திட்டத்தில், சத்துணவு அமைப்பாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
திருவள்ளூர் மாவட்டத்தில்,
எம்.ஜி.ஆர்., சத்துணவு திட்ட மையங்களில் காலியாக உள்ள, 238 சத்துணவு அமைப்பாளர் பணியிடங்களுக்கு, பெண்களிடம் இருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித் தகுதி, பொதுப்பிரிவு, தாழ்த்தப்பட்டோருக்கு, 10ம் வகுப்பு தேர்ச்சி; பழங்குடியினருக்கு எட்டாம் வகுப்பு.
எம்.ஜி.ஆர்., சத்துணவு திட்ட மையங்களில் காலியாக உள்ள, 238 சத்துணவு அமைப்பாளர் பணியிடங்களுக்கு, பெண்களிடம் இருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித் தகுதி, பொதுப்பிரிவு, தாழ்த்தப்பட்டோருக்கு, 10ம் வகுப்பு தேர்ச்சி; பழங்குடியினருக்கு எட்டாம் வகுப்பு.
வயது பொதுப்பிரிவு, தாழ்த்தப்பட்டோர், 21 முதல் 40 வரை. பழங்குடியினருக்கு, 18 - 40 வரை. விதவை / கணவரால் கைவிடப்பட்டோராக இருப்பின், 20 - 40 வரை.
விண்ணப்பத்துடன் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, கல்விச் சான்று, மாற்றுச் சான்றிதழ், ஜாதி, குடும்ப அட்டை, இருப்பிட, வருமானச் சான்று நகல், விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர் எனில், அதற்கான வட்டாட்சியர் சான்று, மாற்றுத்திறனாளிகள் எனில், அதற்குரிய அடையாள அட்டை (ம) மருத்துவர் சான்று நகல். நேர்முக தேர்வின் போது, இவற்றின் அசல் சான்றிதழ்கள் அளிக்கப்பட வேண்டும்.
விண்ணப்பிக்கும் இடத்திற்கும், விண்ணப்பதாரர் குடியிருப்புக்கும் இடையே, 3 கி.மீட்டர் துாரத்திற்குள் இருக்க வேண்டும். காலி பணியிடங்களுக்கான விண்ணப்பம் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியம், நகராட்சி அலுவலகத்தில், நேரில் பெற்று பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை உரிய சத்துணவு மையத்தின் விபரத்துடனும் மற்றும் உரிய சான்றிதழ் நகல்களுடனும், வரும், 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இத்தகவலை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், சுந்தரவல்லி தெரிவித்து உள்ளார்.
No comments:
Post a Comment