இந்திய கடற்படையில் அதிகாரியாக பயிற்சி பெற்று பணியில் சேர தகுதியான திருமணமாகாத ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சி:
Naval Armament Inspection Entry Scheme (Permanent Commission).
சம்பளம்:
ரூ.15,600 - 39,100.
வயது வரம்பு:
19½ முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். அதாவது 2.7.1992 முதல் 1.1.1998 தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:
Mechanical/ Electrical/ Electronics/ Production/ Instrumentation/ IT/ Chemical Metallurgy/ Aerospace Engineering பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் பி.இ.,/ பி.டெக்., பட்டம்.
உடற்தகுதி:
157 செ.மீ., உயரத்திற்கேற்ற எடை இருக்க வேண்டும். தெளிவான பார்வைத் திறன் பெற்றிருக்க வேண்டும்.
தகுதியானவர்கள் எஸ்எஸ்பியால் நடத்தப்படும் கல்வித்தகுதி, நேர்முகத்தேர்வு மற்றும் உடற்தகுதித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். நேர்முகத்தேர்வு 2 பிரிவுகளாக 5 நாட்கள் நடைபெறும்.
Stage 1: Intelligence Test, Picture Perception & Group Discussion தேர்வுகள் என ஒருநாள் நடைபெறும்.
Stage II: Psychological Test, Group Task Test and Interview என 4 நாட்கள் நடைபெறும்.
நேர்முகத் தேர்வில் கலந்து கொள்பவர்களுக்கு முதல் வகுப்பு ஏசி ரயில் கட்டணம் வழங்கப்படும். நேர்முகத்தேர்வு நடைபெறும் நாட்கள்: டிசம்பர் 2016 முதல் மார்ச் 2017.
இடங்கள்:
பெங்களூரு, போபால், கோவை, விசாகப்பட்டினம்.
நேர்முகத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சப்-லெப்டினென்ட்ல் 2 வருட கால பயிற்சி வழங்கப்படும். கேரளா, எழிமலாவில் உள்ள இந்திய கடற்படை அகாடமியில் ஜூன் 2017ல் பயிற்சி தொடங்கும்.
தகுதியானவர்கள் www.joinindiannavy.gov.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
பிரின்ட் அவுட் அனுப்ப வேண்டிய முகவரி:
Post Box No.02,
Sarojini Nagar PO,
New Delhi- 110 023.
பிரின்ட் அவுட் அனுப்ப கடைசி நாள்: 19.12.2016.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 9.12.2016.
No comments:
Post a Comment