TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

பிஇ, பிடெக் படித்தவர்கள் இந்திய கடற்படையில் அதிகாரி ஆகலாம்.

இந்திய கடற்படையில் அதிகாரியாக பயிற்சி பெற்று பணியில் சேர தகுதியான திருமணமாகாத ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பயிற்சி: 

Naval Armament Inspection Entry Scheme (Permanent Commission). 

சம்பளம்: 

ரூ.15,600 - 39,100.

வயது வரம்பு: 

19½ முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். அதாவது 2.7.1992 முதல் 1.1.1998 தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: 

Mechanical/ Electrical/ Electronics/ Production/ Instrumentation/ IT/ Chemical Metallurgy/ Aerospace Engineering பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் பி.இ.,/ பி.டெக்., பட்டம்.

உடற்தகுதி: 

157 செ.மீ., உயரத்திற்கேற்ற எடை  இருக்க வேண்டும். தெளிவான பார்வைத் திறன் பெற்றிருக்க வேண்டும்.

தகுதியானவர்கள் எஸ்எஸ்பியால் நடத்தப்படும் கல்வித்தகுதி, நேர்முகத்தேர்வு மற்றும் உடற்தகுதித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். நேர்முகத்தேர்வு 2 பிரிவுகளாக 5 நாட்கள் நடைபெறும். 

Stage 1: Intelligence Test, Picture Perception & Group Discussion தேர்வுகள் என ஒருநாள் நடைபெறும். 

Stage II: Psychological Test, Group Task Test and Interview என 4 நாட்கள் நடைபெறும்.

நேர்முகத் தேர்வில் கலந்து கொள்பவர்களுக்கு முதல் வகுப்பு ஏசி ரயில் கட்டணம் வழங்கப்படும். நேர்முகத்தேர்வு நடைபெறும் நாட்கள்: டிசம்பர் 2016 முதல் மார்ச் 2017. 

இடங்கள்: 

பெங்களூரு, போபால், கோவை, விசாகப்பட்டினம். 

நேர்முகத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சப்-லெப்டினென்ட்ல் 2 வருட கால பயிற்சி வழங்கப்படும். கேரளா, எழிமலாவில் உள்ள இந்திய கடற்படை அகாடமியில் ஜூன் 2017ல் பயிற்சி தொடங்கும். 

தகுதியானவர்கள் www.joinindiannavy.gov.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

பிரின்ட் அவுட் அனுப்ப வேண்டிய முகவரி: 

Post Box No.02,
Sarojini Nagar PO, 
New Delhi- 110 023.

பிரின்ட் அவுட் அனுப்ப கடைசி நாள்: 19.12.2016.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 9.12.2016.

No comments:

Post a Comment