TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் என்ஜினீயர்களுக்கு வேலை | கடைசி நாள் 31-1-2017

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் என்ஜினீயர்களுக்கு வேலை | நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் என்ஜினீயர்களுக்கு 100 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:-

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் சுருக்கமாக என்.எல்.சி. என அழைக்கப்படுகிறது. பொதுத்துறை நிறுவனமான இதில் 2016-2017-ம் ஆண்டுக்கான கிராஜூவேட் எக்சிகியூட்டிவ்டிரெயினி பணிச்சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படிபட்டதாரி என்ஜினீயர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள். இவை கேட் தேர்வின் அடிப்படையில் நிரப்பப்படும் பணியிடங்களாகும். இந்த ஆண்டு மொத்தம் 100 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

பணிப்பிரிவு வாரியாக மெக்கானிக்கல் - 50, எலக்ட்ரிக்கல் (இ.இ.இ.) - 15,எலக்ட்ரிக்கல் (இ.சி.இ.) 5, சிவில் - 10, மைனிங் - 10, கம்ப்யூட்டர் - 5 இடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்... வயது வரம்பு : விண்ணப்பதாரர்கள் 1-12-2016 தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். கல்வித்தகுதி: பணியிடங்கள் உள்ள என்ஜினீயரிங் / தொழில்நுட்ப படிப்புகளில் குறைந்தபட்சம் பட்டப்படிப்பை நிறைவு செய்து கேட் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை: கேட் 2017 தேர்வில் பெறும் மதிப்பெண் சதவீதத்தின் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். கேட் தேர்வு- நேர்காணலில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் பணியில் சேர்க்கப்படுவார்கள். கட்டணம்: பொது மற்றும். ஓ.பி.சி. பிரிவினர் ரூ.300 கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இவர்கள் ஏற்கனவே கேட்-2017 தேர்வுக்கு விண்ணப்பித்து பதிவு எண் பெற்றிருக்க வேண்டும். அந்த பதிவு எண்ணை குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட வேண்டும்.

பணிக்கான விண்ணப்பம் 6-1-2017 அன்று இணைய தளத்தில் செயல்பாட்டிற்கு வரும் அது முதல் 31-1-2017-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.nlcindia.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கலாம்.

No comments:

Post a Comment