காலியாக உள்ள ஏளூர் கிராமிய அஞ்சல் கிளை அஞ்சலக அலுவலர் பணிக்கு தகுதியுடைய தாழ்த்தப்பட்டவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதுகுறித்து நாமக்கல் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் கே.சண்முகம் விடுத்துள்ள செய்தி:புதுச்சத்திரம் துணை அஞ்சலகத்தின் ஏளூர் கிளை அஞ்சலகத்தில் காலியாக உள்ள கிராமிய அஞ்சல் கிளை அஞ்சலக அலுவலர் பணிக்கு தாழ்த்தப்பட்ட பிரிவினரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.18 முதல் 65 வயதுக்கு உட்பட்ட 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் செப்டம்பர் 20ம் தேதிக்குள் விண்ணப்பத்தை நாமக்கல் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ண ப்பங்களை உரிய சான்றிதழ்களின் சான்றொப்பமிட்ட நகல்களுடன் பதிவுத்தபால் அல்லது விரைவுத் தபால் மூலமாக மட்டுமே அனுப்ப வேண்டும். வேறுவகையில் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மற்றும் கடைசித்தேதிக்கு பிறகு வந்தசேரும் விண்ணப்பங்கள் ஏற்கப் படமாட்டது.மாதிரி விண்ணப்பப் படிவங்களை ஏளூர் கிளை அஞ்சலகம், புதுச்சத்திரம் துணை அஞ்சலகம்,ஏளூர் கிராம நிர்வாக அலுவலகம், ஏளூர் ஊராட்சி அலுவலகம், உதவி அஞ்சலக கண்காணிப்பாளர் அலுவலகம் (நாமக்கல் கிழக்கு) ஆகிய இடங்களில் தகவல்பலகைகளில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.மேலும் விவரங்களுக்கு நாமக்கல் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளரை அணுக வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏளூர் கிளை அஞ்சல் அலுவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment