TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

திண்டுக்கல்லில் காவலர் உடல்திறன் தேர்வு பணி துவங்கியது

திண்டுக்கல் மாவட்டத்தில் இரண்டாம் நிலை காவலர், சிறை வார்டன், தீயணைப்பு அலுவலர் பணிக்காக தேர்வு எழுதிய 14 ஆயிரம் பேர்களில் சுமார் 3 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றதைத் தொடர்ந்து அவர்களுக்கான உடல் திறன் தேர்வு இன்று துவங்கியது.திண்டுக்கல் ஆயுதப்படை காவல் மைதானத்தில் ஈரோடு அதிரடிப்படை காவல் துறைத் தலைவர் சங்கர் ஜீவால், திண்டுக்கல் சரக காவல் துறை துணைத் தலைவர் அறிவுச்செல்வம்,திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் சான்றிதழ் சரிபார்க்கும் பணி, உயரம், மார்பளவு, 1,500மீட்டர் ஓட்டம் ஆகிய தேர்வுகள் நடைபெற்றது. வரும் ஆகஸ்ட் 29ம் தேதி வரை இத்தேர்வுகள் தொடர்ந்து நடைபெறும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் தெரிவித்தார்

No comments:

Post a Comment