TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

வேலை வாய்ப்பு - தமிழக கூட்டுறவு வங்கிகளில்...!!

தமிழக கூட்டுறவு வங்கிகளில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ஏராளமான வேலைகள் கொட்டிக்கிறது. விருப்பமும் தகுதியும் உள்ளோர் அந்தந்த மாவட்ட கூட்டுறவு வங்கிகளுக்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.



ஊதியம்
பணி : உதவியாளர், கிளார்க் (1478 )

ஊதியம்: மாதம் ரூ.11,900 - 32,450 ( பணிக்கு தகுந்தார் போல் ஊதியம் நிர்ணயம் செய்யப்படும்)


வயதுவரம்பு : 01.01.2001 தேதியின் கீழ் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டியது அவசியம். 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். (வயது தளர்வு சலுகை உள்ளது)

மாறுபடும் தேதிகள்
சென்னை கூட்டுறவு வங்ககளில் விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 25ம் தேதி கடைசி நாளாகும். இதேபோல் மதுரை கூட்டுறவு வங்கிக்கு விண்ணப்பிக்க வரும் 16ம் தேதி கடைசி நாளாகும். பெரம்பலூர், தஞ்சாவூர், கடலூர் போன் மாவட்டங்களில் விண்ணப்பிக்க செப்டம்பர் 16ம் தேதி கடைசி நாளாகும். 

விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பிக்கும் முறை: அந்தந்த மாவட்ட கூட்டுறவு வங்கிகளுக்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள், தங்கள் மாவட்ட அரசு இணையதளங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஒவ்வொரு மாவட்டமும் ஒரு தேதியை கடைசி தேதியாக அறிவித்து உள்ளன.

நேர்முகத்தேர்வு
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வின் பெற்ற ஒட்டுமொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு தெரிவு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கட்டணம்
விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப பதிவு மற்றும் எழுத்து தேர்வு கட்டணமாக ரூ.250 செலுத்த வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் அனைத்து பிரிவு சார்ந்த மாற்று திறானாளிகள், ஆதரவற்ற விதவைகள் கட்டணத்திலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. தேர்வு கட்டணத்தை ஆன்லைன் மூலம் எஸ்.பி.ஐ இணையதளத்தில் உள்ள SBI Collect என்ற சேவையை பயன்படுத்தி செலுத்தலாம்.

பட்டப்படிப்பு

கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்பிடிப்பு முடித்து அத்துடன் கூட்டுறவுப் பயிற்சி முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் பள்ளி இறுதி வகுப்பு அல்லது மேல்நிலை படிப்பின் போது தமிழ்மொழியை ஒரு பாடாமாக படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம். கணினி பயன்பாட்டில் அடிப்படை அறிவு இருக்க வேண்டியதும் அவசியம்.

No comments:

Post a Comment