TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

உங்க ஜாதகம் கிரக அமைப்பு அரசாங்க வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருமா?

சிலருக்கு மட்டுமே அரசு வேலை கிடைப்பது ஏன்? 7.5 கோடி மக்கள் வசிக்கும் தமிழகத்தில், அரசுப்பணியில் இருப்பவர்கள் வெறும் 30 லட்சம் பேர்கூட இருக்கமாட்டார்கள். ஏன் இந்த நிலை? ஒருமனிதனின் தொழில் பற்றி அறிந்துகொள்ள ஜாதகத்தில் ஜீவனஸ்தானமான 10-ம் இடத்தைப் பார்க்க வேண்டும்.  கூடவே, முற்பிறவியில் அவர்கள் செய்த கர்ம வினைகளுக்கு ஏற்பவே பதவி அமையும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரனுக்கு அல்லது லக்னத்துக்கு 1, 5, 9-ம் இடங்களில் குரு இருந்தால், 'குரு சந்திர யோகம்' உண்டாகும். இந்த யோகம் இருப்பவர்கள், உயர்ந்த கல்வி பெற்று கல்வி கேள்விகளில் ஞானம் பெற்றவராக, அரசருக்கு நிகரான வாழ்வு வாழ்வார்கள். பூமியோகம், வாகன யோகம் அமையப்பெற்றவர்களாகவும் இருப்பார்கள். ஆனால், மற்ற சுபகிரகங்களும் கெட்டுப்போகாமல் இருக்கவேண்டும்.
குறிப்பாக, 10-ம் இடத்து அதிபதியின் தசாபுக்தி வரும்போதுதான் பார்க்கும் பணியில் உன்னதமான நிலையை அவர்கள் அடைவார்கள். தனது பணிக்காக அரசாங்க விருதைப் பெறுவார்கள்.
அரசாங்கப் பணியில் அமர்வதற்கு லக்னம், பூர்வ புண்ணியஸ்தானமான 5-ம் இடம், ஜீவனஸ்தானமான 10-ம் இடம் ஆகியவற்றைப் பார்க்க வேண்டும். சூரியன், சந்திரன், குரு மற்றும் சனி ஆகிய கிரகங்கள் பலம் பெற்று இருந்தால்தான் ஜாதகருக்கு அரசுப் பணி கிடைக்கும்.
இந்த குரு சந்திர யோகம் அமையப்பெற்றவர்களில் ஒரு சிலருக்கு கிரகங்கள் மிக நல்ல நிலையில் ஆட்சி, உச்சம் பெற்று இருந்தால், அவர்கள் தங்களின் படிப்பை விடுத்து சொந்தத் தொழிலில் ஈடுபட்டு கோடீஸ்வரர்களாகத் திகழ்வார்கள்.
சந்திரனின் முழுமையான அருளைப் பெற தஞ்சாவூர் அருகேயுள்ள திங்களூருக்கும், குருவின் அருளைப்பெற ஆலங்குடிக்கும் சென்று வந்தால் நல்ல பலன் கிடைக்கும். 

No comments:

Post a Comment