TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

சவுத் இந்தியன் வங்கியில் கிளார்க் வேலை


பிரபல பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சவுத் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 468 கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இளைஞர்களிடமிருந்து வரும் 30க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


மொத்த காலியிடங்கள்: 468

பணி: Probationary Clerks 

பணியிடம்: ஆந்திரா, தமிழ்நாடு, தில்லி, தெலங்கானா கேரளா

மாநிலங்கள் வாரியான காலியிடங்கள் விவரம்: 
1. தமிழ்நாடு - 68
2. கேரளா - 340
3. ஆந்திரா மற்றும் தெலங்கானா - 35
4. தில்லி என்சிஆர் - 25

தகுதி: பத்தாம், +2 மற்றும் 60 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 31.12.2017 தேதியின்படி 26க்குள் இருக்க வேண்டும். அதாவது 01.01.1992 மற்றும் 31.12.1997 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயதுவரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.

சம்பளம்: மாதம் ரூ.11765 - 31,540

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற அனைத்து பிரிவினர் ரூ.250 செலுத்தினால் போதுமானது.

விண்ணப்பிக்கும் முறை: www.southindianbank.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.southindianbank.com/UserFiles/file/Notification_recruitment_clerks_2017-2018.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment