TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

தமிழக அரசு சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: 10-ம் தேதி கிண்டியில் நடக்கிறது

அரசு சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டையில் வரும் 10-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வேலை தேடும் இளைஞர்களுக்காக சென்னை கிண்டியில் உள்ள தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. இதன்படி, கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டையில் உள்ள சிஐடி வளாகத்தில் உள்ள அட்வான்ஸ்டு ட்ரெயினிங் இன்ஸ்ட்டியூட்டில் வரும் 10-ம் தேதி காலை 9மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. இதற்கு அனுமதி இலவசம்.

இந்த வேலைவாய்ப்பு முகாமில், 50-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்கள் நிறுவனத்துக்கு தேவை யான ஆட்களைத் தேர்ந்தெடுக்கவுள்ளன. இந்த முகாமில் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 8-ம்வகுப்பு, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பட்டயப்படிப்பு, இளங்கலை பட்டப் படிப்பு மற்றும் முதுகலைப் படிப்பு வரை படித்தவர்கள் தங்களது கல்விச் சான்றுகள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை ஆகியவற்றுடன் நேரில் கலந்து கொள்ளலாம். வேலைக்கு தேர்ந்தெடுக்கப் படுபவர்களுக்கு அன்றைய தினமே பணி நியமன ஆணைகளை அந்தந்த நிறுவனங்கள் வழங்கும் என்றுமாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment