TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

சுகாதார துறையில் காலியிடங்களுக்கு தேர்வு

தமிழக சுகாதாரத் துறையில் உள்ள, ௩௧ காலியிடங்களுக்கு, நவ., ௨௬ல், எழுத்துத் தேர்வு நடத்தப்படும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

 

தமிழக சுகாதாரத் துறையில், 30; இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையில், ஒன்று என, 31 புள்ளியியலாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு, நவ., 26ல்நடத்தப்படும் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

ஒரே நாளில், இரண்டு தாள்களுக்கு, முற்பகல் மற்றும் பிற்பகலில் தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வுக்கான, 'ஆன் - லைன்' விண்ணப்ப பதிவு, நேற்று துவங்கியது. அக்., 3 வரை, பதிவு செய்யலாம். தேர்வு தொடர்பான கூடுதல் விபரங்களை, www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment