TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

மத்திய வேலைவாய்ப்புத் துறை சார்பில் இன்றும், நாளையும் சென்னையில் வேலைவாய்ப்பு முகாம்: 65-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்பு

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, தமிழ்நாடு திறன் மேம்பாடு கழகம் மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) ஆகியவை இணைந்து சென்னையில் இன்றும், நாளையும் வேலைவாய்ப்பு முகாமை நடத்துகின்றன.



இதுதொடர்பாக சிஐஐ-டைட்டன் மாதிரி தொழில்நெறி வழிகாட்டி மைய அதிகாரி பரமேஸ்வர், மத்திய வேலைவாய்ப்புத் துறை அதிகாரி எஸ்.பிரேம்ஆனந்த் ஆகியோர் நேற்று கூறியதாவது: சென்னை கிண்டி திருவிக தொழிற்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக வளாகத்தில் செப்டம்பர் 15, 16-ம் தேதிகளில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும். காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் இளநிலை, முதுநிலை மற்றும் பொறியியல் பட்டதாரிகள், 10-ம் வகுப்பு, ஐடிஐ, பாலிடெக்னிக் படிப்பு பயின் றோர் பங்கேற்கலாம்.முகாமில் முன்னணி தனியார் நிறுவனங்கள் உட்பட 65-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பினை வழங்க உள்ளன. வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க அனுமதி இலவசம். முகாமில் பங்கேற்க முன்பதிவு செய்யாதவர்கள் நேரடியாக முகாம் நடைபெறும் இடத்துக்கு வந்து பதிவு செய்துகொண்டு பங்கேற்கலாம். எனவே, இந்த வாய்ப்பினை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முகாம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 044-22500540, 22500560 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment