அஞ்சலகப் பணிக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அஞ்சல் துறையில் கோட்டம் வாரியாக காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி கடலூர் கோட்டத்தில் மொத்தமுள்ள 290 கிராமப்புற கிளை அஞ்சலகங்களில் காலியாக உள்ள 26 கிராமப்புற அஞ்சல் தலைவர் பணியிடங்கள், 11 கிராமப்புற அஞ்சல் தலைவர் அல்லாத பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியானது. இதற்கான விண்ணப்பங்களை இணையம் (ஆன்-லைன்) மூலமாகவே அனுப்ப வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி கடலூர் கோட்டத்தில் மொத்தமுள்ள 290 கிராமப்புற கிளை அஞ்சலகங்களில் காலியாக உள்ள 26 கிராமப்புற அஞ்சல் தலைவர் பணியிடங்கள், 11 கிராமப்புற அஞ்சல் தலைவர் அல்லாத பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியானது. இதற்கான விண்ணப்பங்களை இணையம் (ஆன்-லைன்) மூலமாகவே அனுப்ப வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதற்கான காலக்கெடு மே 9-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் தற்போது கூடுதலாக 15 நாள்கள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி வரும் 24-ஆம் தேதிவரை இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என கடலூர் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் ச.சிவப்பிரகாசம் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment