TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

ராமநாதபுரத்தில் அஞ்சலக ஆயுள் காப்பீடு முகவர் பணிக்கு ஜூன் 9-இல் நேர்காணல்

அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத் துறையில் முகவர் பணிக்கான நேர்காணல் வரும் ஜூன் மாதம் 9-ஆம் தேதி ராமநாதபுரம் அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
  இது குறித்து கோட்டக் கண்காணிப்பாளர் என்.ஜெ.உதய சிங் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அஞ்சல் துறையின் ஆயுள்காப்பீடு திட்ட நேரடி முகவர் தேர்வுக்கான நேர்காணல் வரும் ஜூன் மாதம் 9 ஆம் தேதி காலை 10 மணிக்கு ராமநாதபுரம் அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. விருப்பம் உள்ளவர்கள் தங்களின் சுயவிபரக் குறிப்பு, வயதுச் சான்றிதழ், கல்விச் சான்றிதழ் ஆகியனவற்றுடன் பங்கு பெறலாம். 18 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிப்பவர்கள் வசிக்கும் பகுதியின் மக்கள் தொகை 5 ஆயிரத்துக்கு கீழிருந்தால் 10 ஆம் வகுப்பு கல்வித் தகுதியாகவும், அதற்கு மேலிருக்கும் பட்சத்தில் 12 ஆம் வகுப்பு கல்வித் தகுதியாகவும் இருத்தல் வேண்டும். ஒவ்வொருவரும் அவரவர் வசிக்கும் பகுதியினை பற்றிய அறிவு, கணினி அறிவு மற்றும் காப்பீட்டு முகவர்களாய் முன்னர் பணி செய்திருந்தால் முன்னுரிமை வழங்கப்படும்.

  ஆர்வமுள்ளவர்கள் மேலே குறிப்பிட்டுள்ள சான்றிதழ்களுடன் அஞ்சல் ஆயுள் காப்பீட்டின் நேரடி முகவர் தேர்வுக்கான நேர்காணலில் கலநது கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment