TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

மத்திய அரசில் உதவி தொல்பொருள் ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு.

மத்திய அரசில் நிரப்பப்பட உள்ள 45 உதவி தொல்பொருள் ஆய்வாளர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பணி: உதவி தொல்பொருள் ஆய்வாளர்
காலியிடங்கள்: 45
சம்பளம்: மாதம் ரூ.9,300-34,800
வயது வரம்பு: 18 வயதிலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: முதுகலைப் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Data processing assistant
காலியிடங்கள்: 21
சம்பளம்: மாதம் ரூ.9,300-34,800
வயது வரம்பு: 18 வயதிலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: தகவல் தொழில்நுட்பம்/கணினி அறிவியல்/பி.இ./பி.டெக் ஆகிய பொறியியல் மற்றும் இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணியிடம்: தில்லி
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100-ஐ ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி மூலம் செலுத்த வேண்டும். பெண்கள்/எஸ்சி/எஸ்டி ஆகியோர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: http://ssconline.nic.in/ssc/ என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 30.09.2016

1 comment: