தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக்கழகம், கடலூர் மண்டலத்தில் இயங்கி வரும் வட்ட செயல் முறைக் கிடங்குகள் மற்றும் நவீன அரிசி ஆலையில் (நெய்வேலி) சுமைத்தூக்கும் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மண்டல மேலாளர்(பொறுப்பு) சு.ஜோதிபாசு தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில், கடலூர் மண்டலத்தில் இயங்கி வரும் வட்ட செயல் முறைக் கிடங்குகள் விருத்தாசலம் -20 நபர்கள், குறிஞ்சிப்பாடி-15 நபர்கள், நவீன அரிசி ஆலை நெய்வேலி-15 நபர்கள் ஆக மொத்தம் 50 நபர்கள் தேவைப்படுகின்றனர்.
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளுக்கும் மற்றும் அரசு சார்ந்த திட்டங்களுக்கும் உணவுப்பொருள் மூட்டைகளை (50 மற்றும் 100 கிலோ) எடையிட்டு தைத்து லாரிகளில் ஏற்றவும், வெளியில் இருந்த வரும் மூட்டைகளை இறக்கி அடுக்கவும், சுமைத்தூக்கும் பணிக்கு அனுபவம் மற்றும் நல்ல உடல் திறனும் உள்ளவர்கள் செப்டம்பர் 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி, மண்டல மேலாளர்(பொறுப்பு), தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம், நெல்லிக்குப்பம் சாலை, செம்மண்டலம், கடலூர்-1.
சுமைத்தூக்கும் தொழிலாளர் பணி: விண்ணப்பம் வரவேற்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment