தமிழகத்தில் தரம் உயர்த்தப்பட்ட நூலகங்களுக்கு 256 புதிய நூலகர் பணியிடங்களை ஏற்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து, நேற்று அவர் வெளியிட்ட அறிவிப்பு: எந்த ஒரு நாட்டில் படிக்கும் பழக்கம் பெருகுகிறதோ அந்த நாடு விழிப்புணர்வுமிக்க நாடாகக் கருதப்படும். இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த நூலகங்களின் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு 96 ஊர்ப்புற நூலகங்கள் கிளை நூலகங்களாக தரம் உயர்த்தப்படும். அதனை நிர்வகிக்க ரூ.5,200- ரூ.20 ஆயிரம் மற்றும் தர ஊதியம் ரூ.2 ஆயிரம் என்கிற ஊதிய விகிதத்தில் 96 மூன்றாம் நிலை நூலகர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும்.மேலும், 160 பகுதி நேர நூலகங்களை ஊர்ப்புற நூலகங்களாக தரம் உயர்த்தவும், தரம் உயர்த்தப்படும் நூலகங்களை நிர்வகிக்க ரூ.2,500-ரூ.5,000 மற்றும் தரஊதியம் ரூ.500 என்ற சிறப்பு ஊதிய விகிதத்தில் தோற்றுவிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அரசின் இந்த நடவடிக்கைகள் பொது மக்கள்மற்றும் மாணவர்களுக்கு பெரும் உதவியாக இருப்பது மட்டுமன்றி அவர்களது கல்வி அறிவு சிறந்து விளங்க வழிவகை செய்யும் என்று அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Home
Unlabelled
தரம் உயர்த்தப்பட்ட நூலகங்களுக்கு 256 புதிய நூலகர் பணியிடங்கள்
தரம் உயர்த்தப்பட்ட நூலகங்களுக்கு 256 புதிய நூலகர் பணியிடங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment