TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

இந்திய அஞ்சல்துறை வங்கிக்கு ஆள் தேர்வு

இந்திய அஞ்சல்துறை வழங் கீட்டு வங்கியில் (ஐ.பி.பி.பி.) தலைமைச் செயல் அலுவலர் மற்றும் மேலாண் இயக்குநர், தலைமைத் தொழில்நுட்ப அலுவ லர் (சி.டி.ஓ.) பணியிடங்கள் மற்றும் வங்கியின் இயக்கம், விபத்துத் தடுப்பு, நிதி, மனித ஆற்றல் மற்றும் நிர்வாகம், விற்பனை, சந்தைப்படுத்தும் துறை உள்ளிட்ட துறைகளுக் கான தலைமைச் செயல் அலு வலர் பணியிடங்களில் நியமிப்ப தற்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மேலும், ஒப்பந்த அடிப்படை யில் பணியாளர்களை நியமிப் பது குறித்தும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இதர பணி யிடங்களுக்கான வழக்கமான ஆள்சேர்ப்பு குறித்து வரும் வாரங்களில் அறிவிக்கப்படும். அடுத்த ஆண்டு நாடு முழுதும் 650 கிளைகள் தொடங்க ஐ.பி.பி.பி. திட்டமிட்டுள்ளது. பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக் கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment